districts

img

மயிலாடுதுறையில் செந்தொண்டர் மாநில பயிற்சி முகாம் துவங்கியது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செந்தொண்டர் மாநில பயிற்சி முகாம் மயிலாடுதுறையில் சனிக்கிழமை  துவங்கியது. கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலா தலைமையில் கேணிக்கரை கிங் பேலஸ் மண்டபத்தில் நடைபெற்று வரும் முகாமை மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் துவக்கி வைத்து உரையாற்றினார். மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் வரவேற்று பேசினார். ‘செந்தொண்டர்களின் தலைமை பண்புகள்’ என்ற தலைப்பில் மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக் கண்ணன், ‘புரட்சி பாதையில் செம்படை வீரர்கள்’ என்ற தலைப்பில் மாநிலக்குழு  உறுப்பினர் எஸ்.பி.ரா ஜேந்திரன், ‘மாநில செந்தொண்டர் பணிகள்’ என்ற தலைப்பில் மாநில கன்வீனர் ஜி.ஸ்டாலின் ஆகியோர் உரையாற்றினர்.